Tuesday, 17 April 2012

தம்பி ஒரு குற்றம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டான் ..அவன் மாமாவை (அக்கா வீட்டுக்கார்) போலிஸ் பிடித்து லாக்கப்பில் வைத்திருக்கிறார்கள்

கேள்வி:எங்கள் பகுதியில் ஒருவன் குற்றம் செய்துவிட்டு தப்பி 
ஓடிவிட்டான் போலிசார் ஒரு குற்றமும் செய்யாத அவன் மாமாவை (அக்கா வீட்டுக்கார்) போலிஸ் பிடித்து லாக்கப்பில் 
வைத்திருக்கிறார்கள்.உன் மருமகன் வந்தால் தான் உன்னை 
விடுவேன் என்று கூறுகிறார்கள்,இவ்வாறு செய்வதற்கு சட்டம் 
இருக்கிறதா? (சுகுமார்,மாங்காடு சென்னை)




பதில்: குற்றம் செய்தவனைப் பிடிக்க வேண்டுமே தவிர,குற்றம் செய்யாத நபரின் அடிப்படைஉரிமையை பறிக்கும் உரிமை காவல் துறையினருக்கு இல்லை.குற்றம் செய்யாத  குடும்ப உறுப்பினர்களையோ, நண்பர்களையோ பிடித்து சென்று லாக்கப்பில் வைப்பதற்கு 
அதிகாரம் இல்லை,அப்படி செய்யும் காவல் துறையினர் மீது வழக்கு தொடரலாம்.ரிட் மனு கூடப் 
போடலாம்,அவர்களின் வேலை போகும், நடவடிக்கை எடுக்க தயங்காதீர்.

No comments:

Post a Comment