Friday, 21 September 2012

விண்ணப்பிக்கவும் திராவிடியன் பல்கலைக்கழக சிறப்பு உதவித்தொகை


குப்பம்: ஆந்திராவிலுள்ள திராவிடியன் பல்கலைக்கழகம், தான் வழங்கும் ரெகுலர் எம்.ஏ, எம்.பில் மற்றும் பி.எச்டி படிப்புகளுக்கு, தமிழகம் மற்றும் கர்நாடகாவிலிருந்து அதிகளவு மாணவர்களை சேர்க்கும் திட்டத்தைக் கொண்டுள்ளது. இப்பல்கலையில், Off - campus முறையில் பி.எச்டி படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவின், சித்தூர் மாவட்டத்தில், குப்பம் என்ற இடத்திலுள்ள இப்பல்கலையின் தமிழ் துறையில், கற்பித்தலை மேம்படுத்த, மேலும் 4 ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை, இத்துறையின் உள்கட்டமைப்புகளுக்காக, 2 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழ் துறையில், எம்.ஏ, எம்.பில் மற்றும் பி.எச்டி படிப்புகளில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு, சிறப்பு உதவித்தொகை திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ரெகுலர் மாணவர்களுக்கான, உணவு மற்றும் தங்குமிட செலவினங்கள் இவற்றுள் அடங்கும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாயுள்ள BC/MBC/SC/ST பிரிவு மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதைப்பற்றி முழு விபரம் அறிய www.dravidianuniversity.ac.in என்ற இணையதளம் செல்க அல்லது kduvivekago@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புக

Sunday, 16 September 2012

இளைய தளபதி ரசிகர்களுக்கு ஓர் வேண்டுகோள்

          சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில் தங்களின் பார்வையில் பட்டால் உடனே அவர்க்ளை அருகில் உள்ள மருத்துவமணையில் சேர்த்து,விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமான கடமையாகும்.இதற்கு மருத்துவமணை  நிர்வாகம் கண்டிப்பாக ”முதல் தகவல் அறிக்கை" (FIR) கேட்கக்கூடாது,முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம். என்று உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.                 

                 தயவு செய்து இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கு FACEBOOK,TWITTER,GOOGLE+,EMAIL மூலம் பரப்புங்கள்,அனைவருக்கு உதவியாக இருக்கும்..

ஏன் நாளை நமக்கே உதவியாக இருக்கலாம்

Wednesday, 5 September 2012

கோவை மாவட்ட இளைய தளபதி ரசிகர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்


A . முத்துசாமி வயது 62 இருதய அறுவைசிகிச்சைக்காக கோவை PSG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அவருக்கு உடனடியாக 
A-Negative இரத்தம் தேவைபடுகிறது,தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண் 


R .லட்சுமி  -  9159366271 .

கோவை மாவட்ட இளைய தளபதி ரசிகர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள் "A negative "ரத்தம் உள்ள உங்கள் நன்பர்கள் அல்லது உறவினர்களை விசாரித்து இந்த மேற்க்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு இந்த உயிர் காக்கும் பணியினை செய்ய்யுமாறு தாமையுடன் கேட்டு கொள்கிறோம்.

Friday, 31 August 2012

உறுப்பு தான பிரச்சாரத்தில் கணவன் - மனைவி: திருப்பூர் தம்பதியின் அசத்தல் முயற்சி

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், திருப்பூரை சேர்ந்த தம்பதியினர் ஈடுபட்டுள்ளனர்.உடல் உறுப்பு தானத்தால், நாம் இறந்த பின்னும் வாழ்கிறோம். உடல் உறுப்புகளை தானம் செய்திட, பல்வேறு அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதி, உறுப்பு தானத்தை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பூர் , காலேஜ் சாலையை சேர்ந்தவர் சிவசுப்ரமணி. இவரது மனைவி ஜானகி. சிறு வயது முதலே சமூகப் பணியில் சிவசுப்பிரமணி தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.திருமணத்துக்கு பின், தன் மனைவியோடு, மாநிலம் முழுவதும் உடல் உறுப்பு தானம், ரத்த தானத்தை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தம்பதி.



சிவசுப்ரமணி,ஜானகி,ஆகியோர் கூறியதாவது:கடந்த, 2008 ஜன., 31ம் தேதி முதல், ரத்த தானம், கண் தானம், உடல் தானம், உறுப்பு தானத்தை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் நாங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம்.எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கிய நாளன்று, இந்திய ராணுவத்துக்கு, எங்களது உடலை தானம் செய்தோம். இந்தியாவிலேயே ராணுவத்துக்காக உடலை தானம் செய்த முதல் தம்பதி என்ற பெருமையை நாங்கள் பெற்றோம்.கன்னியாகுமரி, கரூர், விருதுநகர், திருச்சி, சேலம், திருப்பூர், கோவை, ஈரோடு உள்பட, 12 மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளோம். மாதந்தோறும் பத்து நாள், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வோம்.மற்ற நாளில், திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து, அதில் வரும் கூலியை வைத்து, பிழைப்பு நடத்தி வருகிறோம். பிரச்சாரத்தின் போது, கழுத்தில் உண்டியலை மாட்டிக் கொண்டு, மக்களிடம் நிதி கேட்போம். இதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு, துண்டு பிரசுரம் அச்சிட்டு, மக்களுக்கு விநியோகிப்போம்.

நாமக்கல் மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட போது, முன்னாள் கலெக்டர் சகாயம், எஸ்.பி., பாரி ஆகியோர் பாராட்டினர். எங்களது விழிப்புணர்வு பிரச்சாரத்தால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், ரத்ததானம், உறுப்பு தானம், உடல் தானம் செய்வதாக உறுதிமொழி வழங்கியுள்ளனர்.சில ஆண்டுக்கு முன், என் கணவருக்கு, வலது கையும், இடது காலும் செயலிழந்தது. ஆனாலும், நாங்கள் சாகும் வரை, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி : தினமலர்




Saturday, 25 August 2012

காதலுக்கு மரியாதை

திருமணம் சேர்த்த இருமனம்...
ஆண்டு பதிமூன்றையை கடந்த நறுமனம்..
இருமனம் கலந்த அன்பில் 
சஞ்சய்,திவ்யா எனும் வெகுமானம்.



ஆண்டு பதிமூன்று கடந்து 

அன்பின் சிறப்பெய்தி 

அன்னை,தந்தை உறவிற்கு தலை வணங்கி

காதலுக்கு மரியாதை செய்து

உறவுகளை பேணிகாத்து

மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்

எங்கள் அன்பின் இலக்கணம்

அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய

இளைய தளபதி விஜய் - திருமதி சங்கீதா விஜய்
அவர்களுக்கு 

இனிய 

திருமண நாள்  நல்வாழ்த்துகள்


வாழ்க வளமுடன்
என்றும் வணங்கி வாழ்த்தும்

அமைப்பாளர்கள்
விஜய் மக்கள் இயக்கம் (INTERNET FORUM)